×

பணம் பறித்த வாலிபர் கைது

வேலூர், அக்.10: வேலூர் மரியலாசர் நகரை சேர்ந்தவர் இருதயராஜ்(57). இவர் நேற்று முன்தினம் ஆற்காடு சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே நின்றிருந்தாராம். அப்போது அவ்வழியே வந்த வாலிபர் ஒருவர் இருதயராஜின் பாக்கெட்டில் இருந்து ₹500 பறித்துக் கொண்டு தப்பியோடினார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் பணம் பறித்த வாலிபரை மடக்கிப் பிடித்து வேலூர் வடக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் வேலூர் இன்பென்டரி சாலையை சேர்ந்த அருண்(27) என தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, போலீசார் வழக்கு பதிந்து அருணை கைது செய்தனர்.

Tags : Money Laundering Man ,
× RELATED பணம் பறித்த வாலிபர் கைது