×

குருந்தன்கோடு ஒன்றிய அலுவலகத்தில் ஒப்பந்ததாரர் காத்திருப்பு போராட்டம்

திங்கள்சந்தை, அக். 10: குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 2017ம் ஆண்டு பல்வேறு வளர்ச்சிப்பணிகள், பேரிடர் தடுப்பு, சுகாதாரப்பணி மற்றும் ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கட்டிடங்களை சீரமைத்தல் போன்ற பணிகளை ஒப்பந்ததாரர் தேவ அருள்ரவி என்பவர் செய்துள்ளார். இந்த வகையில் அவருக்கு ஒன்றிய அலுவலகம் ரூ.13 லட்சத்து 94 ஆயிரம் வழக்க வேண்டி உள்ளது என கூறப்படுகிறது. ஆனால் இதுவரை அந்த பணத்தை கொடுக்காமல் அதிகாரிகள் இழுத்தடித்து வந்துள்ளனர்.

இதுகுறித்து தமிழக முதல்வர் மற்றும் கலெக்டருக்கு புகார் மனு அனுப்பியும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இதனால் விரக்தி அடைந்த ஒப்பந்ததாரர் வேத அருள்ரவி நேற்று காலை குருந்தன்கோடு ஒன்றிய அலுவலக நுழைவு வாயில் முன் திடீரென காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் அதிகாரிகளை கண்டித்து கோஷமும் எழுப்பினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த இரணியல் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து ஒப்பந்ததாரரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதில் உடன்பாடு ஏற்படாததால் பின்னர் அவரை காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

Tags : Contractor ,office ,Union ,Kurundankodu ,
× RELATED நெல்லை அரசு ஒப்பந்ததாரர் அலுவலகத்தில் ஐ.டி. சோதனை..!!