×

கல்லூரி மாணவி மாயம்

முஷ்ணம், அக். 10: முஷ்ணம் அடுத்த நெடுஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி(40). இவரது மகள் அபிதா(19). இவர் அரியலூர் மாவட்டம் தத்தனூர் தனியார் கல்வி நிறுவனத்தில் மூன்றாம் ஆண்டு பி.ஏ ஆங்கிலம் பயின்று வருகிறார். கடந்த 1ம் தேதி வழக்கம்போல் வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்றவர் மாலையில் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது பெற்றோர் கல்லூரிக்கு சென்று விசாரித்தபோது, மூன்று மாதமாக கல்லூரிக்கு வரவில்லை என தெரிந்தது. பல்வேறு இடங்களில் தேடியும் அவரை காணவில்லை. இது குறித்து முஷ்ணம் காவல்நிலையத்தில் சுந்தரமூர்த்தி புகார் அளித்தார். புகாரின்பேரில், காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சேகர் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது