×

அறந்தாங்கி அருகே மரத்தில் தூக்கிட்ட நிலையில் தொழிலாளி சடலம் மீட்பு

அறந்தாங்கி, அக்.9: அறந்தாங்கி அருகே மரத்தில் தூக்கிட்ட நிலையில் கிடந்த தொழிலாளியின் சடலத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். அறந்தாங்கியை அடுத்த அழியாநிலை சித்தாலங்குடியிருப்பைச் சேர்ந்தவர் கருப்பையா மகன் வெள்ளைச்சாமி(29), கான்கிரீட் தொழிலாளி. இவருக்கு 2 தங்கைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 6ம் தேதி வீட்டில் இருந்து சென்ற வெள்ளைச்சாமி மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதையடுத்து அவரை அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று காலை அறந்தாங்கியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் அழியாநிலை பகுதியில் சாலையோரம் இருந்த ஒரு மரத்தில் தூக்கிட்ட நிலையில் வெள்ளைச்சாமி சடலமாக தொங்கினார். தகவலறிந்த அறந்தாங்கி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Aranthangi ,
× RELATED அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் 68.80 சதவீதம் வாக்கு பதிவு