×

செம்பனார்கோவில் பகுதியில் இன்று மின் நிறுத்தம்

மயிலாடுதுறை, அக்.9: நாகை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே கிடாரங்கொண்டான், துணை மின்நிலையத்தில் திறன் உயர்த்தும் பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் கிடாரங்கொண்டான், செம்பனார்கோவில், மேலப்பாதி, பரசலூர் மெயின்ரோடு, கருவாழக்கரை, கஞ்சாநகரம், கருவி, ஆக்கூர், செம்பதனிருப்பு, கீழையூர், தலைச்சங்காடு, கிடங்கல், நத்தம், சின்னங்குடி ஆகிய பகுதிகளுக்கு இன்று 9ம் தேதி (புதன்கிழமை) மதியம் 2 முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என செம்பனார்கோவில் மின்வாரியம் அறிவித்துள்ளது.

Tags : Power shutdown ,Chempanarkovil ,area ,
× RELATED வாட்டி வதைக்கும்...