அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன், பாளை அடுத்த சீவலப்பேரியில் இன்று (4ம் தேதி) தனது பிரசாரத்தை துவக்குகிறார். அமைச்சர் தங்கமணி, பிரசாரத்தை துவக்கி வைத்துப் பேசுகிறார். இதில் அமைச்சர் ராஜலட்சுமி உள்ளிட்ட அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் மாநகர் தச்சை கணேசராஜா, புறநகர் பிரபாகரன் மற்றும் முக்கிய நிர்வாகிகள், சார்பு அணியினர் என திரளானோர் பங்கேற்கின்றனர்.