×

வீகேபுரத்தில் தீக்குளித்த வாலிபர் சாவு

வி.கே.புரம், அக். 4: வி.கே.புரம் மேலக்கொட்டாரத்தை சேர்ந்த நயினார் மகன் சிவபாலசுப்பிரமணியன் (35). இவருக்கு திருமணமாகவில்லை. கடந்த சில ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், மனமுடைந்து காணப்பட்ட அவர் கடந்த 29ம் தேதி வீட்டில் மொபட்டிற்கு வாங்கி வைத்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளித்தார். உடல் கருகிய அவரை நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து வி.கே.புரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : firefighting youth ,
× RELATED சிவகிரியில் பைக்கில் கடத்திய புகையிலை பொருட்கள் பறிமுதல்