பாவூர்சத்திரம், அக்.4: மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு கீழப்பாவூர் காந்தி அறக்கட்டளை சார்பில் பிளஸ்2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. அறக்கட்டளை தலைவர் பண்டாரம் தலைமை வகித்து மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசினார். செயலாளர் சுந்தரராஜன், பொருளாளர் தனுஷ்கோடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாயாண்டி வரவேற்றார். போஸ்ட்மேன் முருகேசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் துணை தலைவர் மாயாண்டி, துணை செயலாளர் முருகன், நிர்வாக குழு உறுப்பினர்கள் மாரியப்பன், நியூபேமஸ் நடராஜன், முருகேசன், ஐயப்பன், பரதேசி, மாயாண்டி, செல்வராஜ், பூவலிங்கம், ஸ்டார் நடராஜன், மாரியப்பன், அருள்ஜோதி என்ற ஆறுமுகம், ராமநாதன், தலையாரி பிச்சையா, ராமர், சங்கர், சுரேஷ், இசக்கிராஜ், ராஜேந்திரன், சுப்பிரமணியன் மற்றும் மகளிர் சுயஉதவி குழு பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். ராயல் செல்வராஜ் நன்றி கூறினார்.