×

அங்கமங்கலத்தில் என்எஸ்எஸ் சிறப்பு முகாம்

திருச்செந்தூர், அக்.4:  நாலுமாவடி காமராஜ் மேல்நிலைப்பள்ளி என்எஸ்எஸ் சார்பில் அங்கமங்கலம் கோட்டார்விளை முத்தாரம்மன் கோயில் வளாகத்தில் சிறப்பு முகாம் நடந்தது. பள்ளி கல்விக்குழு தலைவர் அழகேசன் தலைமை வகித்தார். கோட்டார்விளை கிராம தலைவர் அன்சில்ராஜ் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் திருநீலகண்டன் வரவேற்றார். என்எஸ்எஸ் அலுவலர் கேசவஆனந்த்பிரகாஷ் விளக்கவுரையாற்றினார். முகாமில் மழைநீர் சேகரிப்பு, டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம், பிளாஸ்டிக் ஒழிப்பு, இலவச சட்ட விழிப்புணர்வு முகாம், இலவச கால்நடை மருத்துவ முகாம், சாலைகளை சீரமைத்தல், உழவாரப் பணி, மரக்கன்று நடுதல், மகளிர் குழுக்களுக்கு சிறுதொழில் பயிற்சி, கலைநிகழ்ச்சிகள், பட்டிமன்றம், கருத்தரங்கம் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில் கோட்டார்விளை ஊர் செயலாளர் சாமத்துரை, பொருளாளர் லிங்கத்துரை, சேகர், விக்னேஷ், முதுகலை ஆசிரியர்கள் சதீஷ்குமார், யோகா பயிற்சியாளர் வனசேகர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். உதவி திட்ட அலுவலர் சுப்பையா நன்றி கூறினார். ஏற்பாடுகளை பள்ளி செயலாளர் சேகர் செய்திருந்தார்.

Tags : NSS Special Camp ,Angamangalam ,
× RELATED என்எஸ்எஸ் சிறப்பு முகாம்