×

கோவில்பட்டியில் தசரா பக்தர்கள் காணிக்கை வசூல்

கோவில்பட்டி, அக்.4: குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கடந்த 29ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வாக வரும் 8ம்தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது.    தசரா திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண், பெண் பக்தர்கள் விரதமிருந்து பல்வேறு வேடங்கள் அணிந்து பல ஊர்களுக்கு சென்று அம்மனுக்கு காணிக்கை வசூலித்து வருகின்றனர். இதேபோல் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் தசரா திருவிழாவை முன்னிட்டு கோவில்பட்டியிலும் ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து பல்வேறு வேடங்களை அணிந்த வீதிகள் தோறும் சென்று அம்மனுக்கு காணிக்கை வசூலித்து வருகின்றனர்.

Tags : pilgrims ,Kovilpatti ,
× RELATED கோவில்பட்டியில் வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு..!!