×

மாநில கட்டுரைபோட்டி உடன்குடி பள்ளி மாணவி முதலிடம்

உடன்குடி, அக்.4:  மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் வழி காட்டுத்தலின் படி தூய்மையான நிகழ்வுகள் திட்டத்தின் அடிப்படையில் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு குறித்த நிகழ்ச்சிகள் பள்ளிக்கல்வி திட்டத்தின் மூலம் மாவட்ட அனைத்து பள்ளிகளிலும் நடந்தது. இதில் மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன. முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கு கலெக்டர் சந்தீப் நந்தூரி பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
கட்டுரைப்போட்டியில் மாவட்ட அளவில் இரண்டாம் இடமும், மாநில அளவில் நடந்த போட்டியில் முதலிடம் பெற்ற பண்டாரஞ்செட்டிவிளை மேரிஆன் பெஸ்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜோஸ்பின் பிரேமாவை கலெக்டர் பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார். இதுபோல் மாவட்ட அளவிலான ஓவியப்போட்டியில் மாணவி ரசினத்துள் ஆசிபா முதலிடம் பெற்றார். வெற்றி பெற்ற மாணவிகளை உடன்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் சகுந்தலா, பள்ளி ஆசிரிய பயிற்றுநர் கிறிஸ்டல் சுஜா, ஒருங்கிணைப்பாளர் அமுதா மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள், தாளாளர் விஜயகுமாரி, ஆட்சிமன்றத்தலைவர் ஜாண் சாமுவேல், உறுப்பினர்கள், தலைமையாசிரியை நிர்மலா எப்சிபாய் மற்றும் ஆசிரியைகள் பாராட்டினர்.

Tags : State Essay Competition Immediate School Student ,
× RELATED தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ₹9 லட்சம் காப்பர் வயர் திருட்டு