சாத்தான்குளம், அக்.4: சாத்தான்குளத்தில் சர்வதேச முதியோர் தினம் கொண்டாடப்பட்டது. சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில் சிகரம் அறக்கட்டளை சார்பில் சர்வதேச முதியோர் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஓய்வுபெற்ற தாசில்தார் நடராஜன் தலைமை வகித்தார். ஓய்வுபெற்ற இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊழியர் மாடசாமி, ஓய்வுபெற்ற பேரூராட்சி ஊழியர் விக்ரமன் முன்னிலை வகித்தனர். சாத்தான்குளம் வட்ட சட்டப்பணிக்குழு உதவியாளர் மகேந்திரன் வரவேற்றார். ஓய்வு பெற்ற அஞ்சலக அலுவலர் அனந்தகிருஷ்ணன் பேசினார். நிகழ்ச்சியில் ராஜரத்தினம், ஈஸ்வரன்முத்து, பேச்சிப்பாண்டி, முஸ்தபா, பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சிகரம் இயக்குநர் முருகன் நன்றி கூறினார்.