×

முசிறி நீதிமன்ற வளாகத்தில் புதிய தொடுதிரை கணினி திறப்பு மாவட்ட முதன்மை நீதிபதி பங்கேற்பு

முசிறி, அக்.4: முசிறி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தொடுதிரை கணினியை மாவட்ட முதன்மை நீதிபதி திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு முசிறி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார். அரசு வக்கீல் பாரதிராஜா உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். சங்க செயலாளர் சரவணன் வரவேற்றார். மாவட்ட முதன்மை நீதிபதி முரளிசங்கர் புதிய தொடுதிரை கணினியினை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசுகையில், 5 வருடங்களுக்கு மேலான வழக்குகள் அனைத்தையும் விரைவாக முடிக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கறிஞர்களும், நீதிமன்ற அலுவலர்களும், நீதிபதிகளும் மிக சிறப்பாக பணியாற்றுவதற்கு உதவியாக பயிற்சிகள் நடத்தப்படுகிறது. திறமையான வழக்கறிஞர்கள் மூலம் நீதி நிலை பெறுவதற்கு அனைத்து வசதிகளும், அவர்களின் ஆற்றலை மேம்படுத்துவதற்கு செய்து தரப்படுகிறது என்றார்.மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் கிருபாகரன்மதுரம் வாழ்த்தி பேசினார். விழாவில் வழக்கறிஞர்கள், நீதிமன்ற அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக நீதிமன்ற வளாகத்தில் முசிறி வட்ட சட்டப்பணிகள் குழு சார்பாக மரக்கன்றுகள் நடப்பட்டன. முடிவில் மாவட்ட உரிமையியல் நீதிபதி வேலுசாமி நன்றி கூறினார்.

Tags : District Magistrate ,court complex ,Musiri ,
× RELATED சொத்து பிரச்சனை!: திருப்பூர் மாவட்டம்...