×

வங்கி, நிதி நிறுவன கடன் பெற முகாம்

திருப்பூர், அக்.4: காப்பரேஷன் வங்கி மாவட்ட அளவிலான வங்கியாளர் கூட்டமைப்புடன் இணைந்து மத்திய நிதி அமைச்சகம், நிதி சேவை துறை அறிவுறுத்தல் படி வாடிக்கையாளர் திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. இதில் ெபாதுத்துறை வங்கி, வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், காப்பீடு நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளது. சிறு, குறு தொழில், வீடு, வாகனம், விவசாயம், தனிநபர் போன்றவற்றிக்கு வங்கிகளிடமிருந்து கடன் பெறலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இந்த நிகழ்ச்சி நாளை (5ம் தேதி) காலை 10 மணிக்கு காங்கயம் ரோட்டில் உள்ள காயத்ரி ஹாலில் நடக்கவுள்ளது. பொதுமக்கள் இதில் பங்கேற்று தங்களுக்கு விருப்பமான நிதி நிறுவனத்தில் இருந்து நிதி சேவையை பெறலாம்.

Tags : institution ,
× RELATED அதிக வட்டி ஆசை காட்டி ₹1 கோடி மோசடி...