×

மெயின் ரோட்டில் குழிகள்: வாகன ஓட்டிகள் அவதி

திருப்பூர், அக்.4:    திருப்பூர்-பல்லடம் மெயின் ரோட்டில் வீரபாண்டி பிரிவு உள்ளது. இப்பகுதியில் வட்டார போக்குவரத்து அலுவலகம், ஆவின் பால் குளிரூட்டும் மையம் மற்றும் விற்பனை நிலையம், பெட்ரோல் பங்க் உட்பட நுாற்றுக்கு மேற்பட்ட வணிகவளாக கடைகள் உள்ளது. கோவை, உடுமலை, பொள்ளாச்சி ஆகிய பகுதிகளுக்குசெல்ல மெயின் ரோடாக இருப்பதால் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கிறது. கடந்த ஒரு மாதமாக பெய்த மழையால் ரோட்டின் பல்வேறு இடங்களில் குழிகள் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் தொடர்ந்து குழிகளில் ஏறிச்செல்வதால் குழிகள் நாளுக்கு நாள் பெரிதாகி வருகிறது. இரவு நேரங்களி–்ல் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு போதிய வெளிச்சம் இல்லாததால் குழிக்குள் விழுந்து அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. நெடுஞ்சாலைத்துறையினர் போர்க்கால அடிப்படையில் குழிகளுக்கு ஜல்லிகளை கொட்டி நிரப்பி தார் ஊற்ற வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Motorists ,Main Road ,
× RELATED பொது இடத்தில் தகாத வார்த்தையால் பேசியவர் கைது