×

7 இன்ஸ்பெக்டர்கள் நியமனம்

திருப்பூர்,அக்.4:  திருப்பூர் மாவட்டத்தில் காலியாக உள்ள இடங்களில் 7 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி அவினாசி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக பிரேமா, பல்லடம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக சுஜாதா, பல்லடம் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக கோமதி, அவினாசிபாளையம் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக சரவணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுபோல் மங்கலம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக பழனியம்மாள், தளி காவல்நிலைய இன்ஸ்பெக்டராக மகேஸ்வரி, குண்டடம் காவல்நிலைய இன்ஸ்பெக்டராக சுரேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Inspectors ,
× RELATED நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் 174 பதற்றமான வாக்குசாவடிகள்