×

மது விற்ற 54 பேர் கைது

ஈரோடு, அக். 4: ஈரோடு மாவட்டத்தில் காந்திஜெயந்தியன்று டாஸ்மாக் கடைகள், பார்கள், தனியார் ஏசி பார்கள் என அனைத்துக்கும் விடுமுறை அளித்து கலெக்டர் கதிரவன் உத்தரவிட்டிருந்தார். இந் நிலையில், மர்மநபர்கள் சிலர் மதுபானங்களை பதுக்கி வைத்து, அதிக விலைக்கு விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க எஸ்பி சக்தி கணேசன்,  உத்தரவிட்டார்.அதன்பேரில், ஈரோடு, கோபி, ஆகிய 5 போலீஸ் சப்-டிவிசன்களுக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் நேற்று முன்தினம் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது, சட்ட விரோதமாக மது விற்பனை மற்றும் போதை தரக்கூடிய கள் விற்பனை செய்ததாக 54 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags :
× RELATED மேட்டுப்பாளையம் வாக்குச்சாவடி மையத்தில் மேற்கு மண்டல ஐஜி நேரில் ஆய்வு