×

ஈரோடு அருகே கரும்பு லாரி மோதி 2 பேர் பலி

ஈரோடு, அக்.4:ஈரோடு பெரிய அக்ரஹாரம் பழனியப்பா நகரைச் சேர்ந்தவர் ஜானாப் (49). இவர், பெயிண்டர் மற்றும் ஆட்டோ டிரைவராக வேலை செய்து வந்தார். இதே பகுதியைச் சேர்ந்தவர் அஸ்கர் (50), கார் டிரைவர். இவர்கள் இருவரும் நண்பர்கள். நேற்று முன்தினம் இருவரும் சொந்த வேலையாக பைக்கில் பவானி சென்றனர். அங்கு வேலையை முடித்துவிட்டு இரவு 8.30 மணியளவில் ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்தனர். பெரியஅக்ரஹாரம் செக்போஸ்ட் அருகே வரும்போது ஈரோட்டில் இருந்து பெரியஅக்ரஹாரம் வழியாக கரும்புலோடு ஏற்றிக்கொண்டு வந்த லாரி, பைக் மீது மோதியது.இதில் ஜானாப்பும், அஸ்கரும் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். கருங்கல்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் இறந்த 2 பேரின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக கரும்பு லாரி டிரைவரான ஈரோட்டை சேர்ந்த தங்கவேல் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Erode ,
× RELATED ஈரோட்டில் அனுமதியின்றி பிசினெஸ்...