×

வழிப்பறி வழக்கில் கைதான கொள்ளையன் குண்டாசில் கைது

இளம்பிள்ளை, அக்.4:  இளம்பிள்ளை அருகே உள்ள தப்பகுட்டை கிராமம், முத்துக்குட்டியூர் பகுதியை சேர்ந்த தங்கராஜ் மகன் மாரிமுத்து(39).இவர் தொடர் நகை பறிப்பில் ஈடுபட்ட வழக்கில் கைதாகி, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில், இவர் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால், மாவட்ட கலெக்டர் ராமன் உத்தரவின் பேரில், மாரிமுத்துவுக்கு குண்டாசில் கைது செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆணை, சேலம் மத்திய சிறை அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Tags :
× RELATED மாநகராட்சி மேயர், கமிஷனர் வரிசையில் நின்று வாக்களிப்பு