×

தேசிய தடகள போட்டியில் தங்கம், வெள்ளி வென்ற வீரர், வீராங்கனைக்கு பரிசு

சேலம், அக்.4: திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 17ம் தேதி தேசிய அளவிலான தடகள போட்டிகள் நடந்தது. இப்போட்டியில், சேலம் மாவட்டத்தில் இருந்து வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில், போல்வால்ட் பிரிவில் சேலம் அழகாபுரம் காட்டுவளவை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவி பவித்ரா கலந்துகொண்டு, 3.70 மீட்டர் உயரம் தாண்டி தங்கம் வென்றார்.இதேபோல், டெக்கத்லான் போட்டியில் தனியார் கல்லூரி மாணவன் நவீன்குமார் பங்கேற்று, 6,304 புள்ளிகளுடன் 2ம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார். இவர்களையும் பயிற்சியாளர் இளம்பருதியையும் சேலம் மாவட்ட தடகள சங்கம் பாராட்டியது.இந்நிலையில், வீராங்கனை பவித்ரா, வீரர் நவீன்குமார் ஆகிய இருவரும் நேற்று, மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் டாக்டர் வீரபாண்டி பிரபுவை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இருவரையும் பாராட்டிய அவர், இருவருக்கும் உதவித்தொகை வழங்கினார். அப்போது, சேலம் மாவட்ட தடகள சங்க செயலாளர் முத்துக்குமார், உலகநாதன், வெங்கடேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : winner ,Silver ,National Athletic Championships ,
× RELATED 222 கிலோ வெள்ளி திருடிய ஊழியர் கைது