×

கெங்கவல்லியில் வருவாய் துறையினர் ஆர்ப்பாட்டம்

கெங்கவல்லி, .4:  கெங்கவல்லியில் தாலுகா அலுவலகம் முன்பு வருவாய் கிராம நிர்வாக உதவியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டம், திருவேகம்பத்து கிராம உதவியாளர் ராதாகிருஷ்ணன், கடந்த மாதம் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இறந்த ராதாகிருஷ்ணன் மனைவி ராஜேஸ்வரிக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும், அவரது குழந்தைகள் இருவருக்கும் அரசு படிப்பு செலவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி, கிராம நிர்வாக உதவியாளர் சங்கம் கோவிந்தம்மாள் தலைமையில், தமிழக அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து கெங்கவல்லி தாசில்தார் சிவக்கொழுந்திடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

Tags : protests ,Department ,Kengavalli ,
× RELATED அரசமரத்துக்கு தீ வைத்த மர்ம நபர்கள்