×

திருமணிமுத்தாற்றில் மணல் கடத்திய பிக்கப் வேன் பறிமுதல்.

பரமத்திவேலூர், அக். 4: பரமத்திவேலூர் அருகே திருமணிமுத்தாற்றில் மணல் கடத்திய பிக்கப் வேனை பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடிய டிரைவரை தேடுகின்றனர். பரமத்திவேலூர் அடுத்துள்ள ஒழுகூர்பட்டியை சேர்ந்தவர் அருள்(30). இவர் பரமத்தி இடும்பன் குலம் அருகே திருமணிமுத்தாற்றின் கரையில் சொந்தமாக நிலம் உள்ளது. இந்நிலையில் நேற்று அருள், திருமணிமுத்தாற்றில் மணல் அள்ளி, பிக்கப் வேனில் கடத்துவதாக, அப்பகுதி மக்கள் இடும்பன்குளம் விஏஓ மணிவேலுக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து, அவர் பரமத்தி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து  போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு நடத்தினர். போலீசார் வருவதை கண்ட அருள், பிக்கப் வேனை அங்கேயே விட்டு விட்டு தப்பியோடி விட்டார். மணலுடன் பிக்கப் வேனை பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடிய அருள் மீது வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர்.

Tags : Sukkur ,
× RELATED ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்