×

டெங்கு, மலேரியாவை தடுக்க கொசு மருந்து அடிக்க வேண்டும்

திருச்செங்கோடு, அக்.4: எலச்சிபாளையம் ஒன்றியம் அகரம் கிராமத்தில் 8 வார்டுகள் உள்ளன. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, அகரம் கிராமத்துக்கான கிராம சபை கூட்டம், எலச்சிபாளையம்  சூரப்புலி அம்மன் கோயில் வளாகத்தில் நடந்தது.
இந்த கூட்டத்தில் பொதுமக்கள் சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் சுரேஷ் வழங்கிய கோரிக்கை மனு: அகரம் கிராமத்தில் டெங்கு, மலேரியாவை தடுக்க கொசுக்கள் உற்பத்தியாகும் சாக்கடை கால்வாயை  தூர்வார வேண்டும். கிராமம் முழுவதும் தினமும் கொசு மருந்து அடிக்க வேண்டும். போதிய மழை பெய்தும், காவிரி குடிநீர் வாரம் ஒருமுறை தான் விநியோகம் செய்கின்றனர். தினமும் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கொத்தம்பாளையம் தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் செல்வதால், பொதுமக்கள் பாலத்தை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அங்கு மேம்பாலம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கோரிகை விடுத்திருந்தார். மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.

Tags : Mosquitoes ,
× RELATED டெங்கு கொசுவை ஒழிக்க நடவடிக்கை