×

கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிப்பு

ஓசூர், அக்.4: ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 1048 கனஅடியாக அதிகரித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில், தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியான நந்திமலை உள்ளிட்ட பகுதியில், மழை பொழிவு அதிகரித்துள்ளது. இதனால், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி அணைக்கு, நீர்வரத்து அவ்வப்போது அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. நேற்று முன்தினம், அணைக்கு  568 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை நிலவரப்படி விநாடிக்கு 1048 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் முழு கொள்ளளவான 44.28 அடியில் தற்போது 41.82 அடி தண்ணீர் உள்ளது. இதனால், அணையின் பாதுகாப்பு கருதி, 1048 கனஅடி தண்ணீரும் அப்படியே தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. இந்த தண்ணீர் கிருஷ்ணகிரி அணை நோக்கி பெருக்கெடுத்துச் செல்கிறது. இதனால், வழியோர கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வருவாய்த்துறை அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர். மேலும், இரவு நேரங்களில் ஆற்றை கடந்து செல்ல முயற்சிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

Tags : Kelavarapalli Dam ,
× RELATED ஒசூர் கெலவரப்பள்ளி அணையில் நீர்...