×

புரட்டாசி 3வது சனிக்கிழமையையொட்டி வெங்கட்ரமண சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு

காரிமங்கலம், அக்.4:  கடத்தூர் அடுத்த மணியம்பாடியில் பழமை வாய்ந்த பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோயிலில், புரட்டாசி மாதத்தையொட்டி ஆண்டுதோறும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. புரட்டாசி 3வது சனிக்கிழமையான நாளை(5ம் தேதி) அதிகாலை சுவாமிக்கு பல்வேறு அபிஷேக அலங்காரம், மகாதீபாராதனை நடக்கிறது. காலை 8 மணிக்கு பக்தர்களுக்கு மணி, தமிழ்ச்செல்வி சங்கர்-கணேஷ் குடும்பத்தினர் சார்பில் காலை உணவு வழங்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியை தர்மபுரி தொகுதி எம்பி டாக்டர் செந்தில்குமார் தொடங்கி வைக்கிறார்.  தொடர்ந்து காலை 11 மணிக்கு, சேலம் ராமகிருஷ்ணா மேக்னசைட் அண்டு மைன்ஸ் நிறுவனத்தை சேர்ந்த கமலம்மாள் குடும்பத்தினரின் சார்பில், அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தொழிலதிபர் பிசிஆர் மனோகரன், மணி, ஒமேகா பிரபு, ஊர் கவுண்டர் ஜெயவேல், மந்திரி கவுண்டர் பொன்னுசாமி, ஆறுமுகம், முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் வசந்தன், பழனிசாமி, முன்னாள் தர்மகர்த்தா பழனி, சென்னை வெங்கடேசன்,
தங்கவேல், மனோகரன் செய்துள்ளனர்.

Tags : Venkatramana Swamy Temple ,
× RELATED திருமலை திருக்கல்யாணம் சிறப்பு வழிபாடு