×

சாத்தூர் அருகே ரயில்வே ஊழியர் மர்மச்சாவு

சாத்தூர், அக்.4: சாத்தூர் அருகே ரயில்வே ஊழியர் பாலத்தின் அடியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.சாத்தூர் அருகே முள்ளிசேவலை சேர்ந்தவர் காந்தாரிமுத்து மகன் சண்முகராஜ்(50). இவருக்கு திருமணம் முடிந்து நான்கு பிள்ளைகள் உள்ளனர். சண்முகராஜ் நடுவப்பட்டி ரயில்வே கேட் கீப்பராக வேலைபார்த்து வருகிறார். மூன்று தினத்திற்குமுன்பு வேலைக்கு சென்றுவருவதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் அவரை தேடிபார்த்தும் தகவல் கிடைக்கவில்லை. அதனை தொடர்ந்து வச்சகாரப்பட்டி காவல்நிலையத்தில் சண்முகராஜ் மகன்கள் புகார் மனு கொடுத்துள்ளனர். புகாரை பெற்ற போலீசார் செல்போன் சிக்னல் கொண்டு தேடிவந்த நிலையில், நடுவப்பட்டி பாலத்திற்கு அடியில் ஆண் சடலம் கிடப்பதாக ஆடு மேய்ப்பவர்கள் கொடுத்த தகவலின்படி   அங்கு சென்று பார்த்தனர். அங்கு சண்முகராஜ் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுதொடர்பாக வழக்குபதிவு செய்த வச்சகாரப்பட்டி போலீசார் சடலத்தை பிரேத பரிச்சோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Marmachau ,Chatur ,
× RELATED எதிர்க்கட்சி எம்பி என்பதால் ஒன்றிய...