×

நாடக கொட்டகை தெருவில் நடமாட முடியாத அளவிற்கு குவிக்கப்படும் குப்பைகளால் அவதி

விருதுநகர், அக்.4: விருதுநகரில் உள்ள நாடக கொட்டகை ெதருவில் நடமாட முடியாத அளவிற்கு குப்பைகள் கொட்டப்பட்டுள்ளதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருகிறது.விருதுநகர்  ரயில்வே பீடர் ரோட்டில் இருந்து சங்கரன் கிணற்று தெருவிற்கு சர்வோதய  விற்பனை நிலையத்தை ஒட்டி செல்லும் நாடக கொட்டகை தெரு வழியாக செல்லலாம். இந்த  சாலையின் இருபுறமும் குடியிருப்புகளின் பின்பகுதியாக இருப்பதால் மக்கள்  நடமாட்டம் இருப்பதில்லை. மேலும் இந்த சாலையை  திறந்தவெளி கழிப்பிடமாகவும், சிறுநீர் கழிப்பிட பகுதியாக மக்கள்  பயன்படுத்துவதால் பெண்கள் நடமாட முடியவில்லை. மேலும் ரயில்வே பீடர்  ரோட்டில் கடையினர், குடியிருப்பு வாசிகள் வந்து நாடக கொட்டகை தெருவில்  குப்பைகளை கொட்டி செல்கின்றனர். மக்கள் நடமாட்டம் இல்லாத தெருவில் இரவு  நேரங்களில் சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. மேலும் அப்பகுதியில் குப்பைகள் குவிந்து கிடப்பதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருகிறது. நகராட்சி நிர்வாகம் நாடக  கொட்டகை தெருவில் குவிந்து கிடக்கும் குப்பைகள், புதர் செடிகளை அகற்றி  மக்கள் நடமாடும் வகையில் சரி செய்து தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென  சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.


Tags : theater shed ,street ,
× RELATED நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற...