×

வீட்டில் புகுந்த நல்லபாம்பு

கள்ளக்குறிச்சி, அக். 4: கள்ளக்
குறிச்சி அடுத்த பெருவங்கூர் செல்லும் சாலை ஹாஜியா நகர் பகுதியில் உள்ள கந்தசாமி என்பவரது வீட்டில் பாம்பு பதுங்கி இருந்தது. இதனைக் கண்டு கந்தசாமி குடும்பத்தினர் அச்சமடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலைய அலுவலர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டில் பதுங்கி இருந்த சுமார் 8 அடி நீளமுள்ள நல்ல பாம்பை பிடித்து அருகில் உள்ள வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டனர்.


Tags : house ,
× RELATED சேப்பாக்கம் புதிய அரசு விருந்தினர்...