×

திட்ட பணிகளை ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் திமுக, மதிமுகவினர் திடீர் உண்ணாவிரத போராட்டம்

புவனகிரி, அக். 4: புவனகிரி நகரில் உள்ள வார்டுகளில் வளர்ச்சி பணிகளை செய்வது குறித்து அதிகாரிகள் பாகுபாடு காட்டுவதாக மதிமுக முன்னாள் கவுன்சிலர் ரவி, திமுக முன்னாள் கவுன்சிலர் முத்து உள்ளிட்டோர் புகார் கூறி இருந்தனர். மாவட்ட ஆட்சியரின் உத்தரவை அலட்சியப்படுத்தும் வகையில் அதிகாரிகள் செயல்படுவதாகவும், முத்தாச்சி பிள்ளையார் கோயில் தெரு, ராகவேந்திரா கோயில் உள்ளிட்ட இடங்களில் கழிவுநீர் வடிகால் வாய்க்கால் அமைக்க வேண்டும் என மதிமுக மாவட்ட துணை செயலாளர் ரவி மனு அளித்திருந்தார்.அதுபோல் திமுக முன்னாள் கவுன்சிலர் முத்து, புவனகிரி பாளையக்காரத்தெரு, வள்ளலார் நகர் உள்ளிட்ட இடங்களில் குடிநீர் மற்றும் சாலை பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனவும் மனு அளித்திருந்தார். ஆனால் நடைபெற உள்ள புவனகிரி பேரூராட்சி வளர்ச்சி திட்டப் பணிகளுக்கான டெண்டரில் இந்த பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.இதையடுத்து இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று புவனகிரி பேரூராட்சி அலுவலகம் எதிரில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

Tags :
× RELATED திண்டிவனத்தில் 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்