×

பிற்படுத்தப்பட்டோருக்கு 13 ஆயிரம் தையல் மிஷின்கள்

மதுரை, அக். 4: மதுரை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் உள்ளிட்டோருக்கு 13 ஆயிரம் இலவச தையல் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கலெக்டர் ராஜசேகர் விடுத்துள்ள அறிக்கை: மதுரை மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளாக இலவச தேய்ப்பு பெட்டி மற்றும் தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை பெறுவதற்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். தையல் இயந்திரம் பெறுவதற்கு 20 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

இதுவரை மதுரை மாவட்டத்தில் 13 ஆயிரத்து 95 இலவச தையல் இயந்திரங்களும், 9 ஆயிரத்து 616 இலவச தேய்ப்பு பெட்டிகளும் வழங்கப்பட்டுள்ளன. இது போன்ற உதவிகள் பெறுவதற்கு, தகுதியானவர்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும்’’ இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED நாகமலை புதுக்கோட்டை அருகே நூற்றாண்டு புளியமரம் சாய்ந்தது