×

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திண்டுக்கல், அக்.4: திண்டுக்கல் கிழக்கு ரதவீதி, சன்னதி தெரு, மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் அபிராமி அம்மன் கோயில், ஜவுளி நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு வணிக நிறுவனங்கள் உள்ளன. இப்பகுதியில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து பொருட்கள் வாங்கி செல்வது வழக்கம். இங்கு சாலையோரத்தில் கடைகள் அமைத்து போக்குவரத்துக்கு இடையூறு செய்வதாக திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகனுக்கு புகார் வந்தது. நேற்று டவுன் பிளானிங் அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டு ஆக்கிரமிப்பு செய்த கடைகள் மற்றும் தெருவோரக் கடைகளையும் அகற்றினர்.

Tags :
× RELATED பழநி நகரில் பல்வேறு இடங்களில்...