திண்டுக்கல், அக்.4: திண்டுக்கல் தொழிலாளர் உதவி ஆணையர் (அமுலாக்கம்) ராம்ராஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு: தேசிய பண்டிகை விடுமுறை தினமான காந்தி ஜெயந்தியன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அல்லது சம்பளத்துடன் கூடிய மாற்று விடுப்பு அல்லது இரட்டிப்பு சம்பளம் வழங்கப்பட்டதா என திண்டுக்கல், பழநி, நிலக்கோட்டை, கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் மொத்தம் 110 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு 50 முரண்பாடுகள் கண்டறியப்பட்டது. இது தொடர்பாக அந்நிறுவனங்கள் மீது அபராத அறிவிப்பு வழங்கப்பட்டது. இதுபோன்று 1958ம் ஆண்டு தமிழ்நாடு தொழில் நிறுவனங்களில் தேசிய பண்டிகை சிறப்பு விடுமுறை சட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காமல் செயல்படும் நிறுவனங்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.