கண்ணமங்கலம், அக்.4: கண்ணமங்கலத்தில் நேற்று கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.கண்ணமங்கலம் கொங்கராம்பட்டில் கர்ப்பிணிகளுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். ஆர்டிஓ மைதிலி, தாசில்தார் தியாகராஜன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் கே.டி.குமார், முன்னாள் கவுன்சிலர் கொளத்தூர் திருமால் முன்னிலை வகித்தனர். மாவட்ட அங்கன்வாடி திட்ட அலுவலர் கந்தன் வரவேற்றார்.
இதில் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்து கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார். தொடர்ந்து, கர்ப்பிணிகளுக்கு அறுசுவை விருந்து அளிக்கப்பட்டது. முடிவில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் கண்ணகி நன்றி கூறினார்.இதில் வருவாய் ஆய்வாளர் சுபிச்சந்தர், விஏஓ பிரசாத், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் சிவ.கே.என்.சரவணன், ஏழுமலை உட்பட பலர் கலந்து கொண்டனர்.