×

அரவக்குறிச்சி புஞ்ைச காளக்குறிச்சி சிட்கோ தொழில் மனைகளுக்கு விண்ணப்பிக்க வேண்டுகோள்

கரூர், அக். 4: புஞ்சை காளக்குறிச்சி சிட்கோ தொழில்மனைகளுக்கு விண்ணப்பங்கள் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா புஞ்சைகாளக்குறிச்சியில் ஒருங்கிணைந்த ஜவுளி, பின்னலாடை பூங்காவில் சிட்கோ நிறுவனத்தால் தொழில்மனைகளுக்கு முழுத்தொகை விற்பனை மற்றும் 30 ஆண்டுகால குத்தகை அடிப்படையில் ஒதுக்கீடு செய்வதற்காக ஜவுளி மற்றும் பின்னலாடை சார்ந்த குறு, சிறு, நடுத்தர தொழிற் நிறுவனங்களில் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியாக உள்ள மனைகள் பற்றிய விபரம், அதன் தற்காலிக விலை, நிபந்தனைகள் மற்றும் அனைத்து விபர்ங்களை இணைய தளங்களில் காணலாம்.

தொழில்மனைகள் ஒதுக்கீடு பெற விரும்புவோர் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து பொதுமேலாளர் (நிர்வாகம்), தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம், சிட்கோ தலைமை அலுவலக வளாகம், கிண்டி, சென்னை 600032 என்ற முகவரிக்கு பதிவு தபால் மூலமாக அனுப்பலாம். வரும் 17ம்தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டும்.இது தொடர்பான மேலும் விபரங்களுக்கு சிட்கோ கிளை மேலாளர் சென்னிமலை ரோடு, ஈரோடு என்ற முகவரிக்கு அல்லது 0424&2275237 என்ற தொலைபேசி மூலமாக தொடர்பு கொள்ளலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது,

Tags :
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...