×

முத்துப்பேட்டை பேரூராட்சி சார்பில் மரக்கன்று நடும் பணி மும்முரம்

முத்துப்பேட்டை, அக்.4: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் கடந்தாண்டு வீசிய கஜாபுயல் ஒட்டு மொத்த மரங்களையும் அடியோடு சாய்த்தது.இதனால் பேரூராட்சிக்குடப்பட்ட பகுதியில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மீண்டும் மரங்களை உருவாக்கும் வகையில் ஏராளமான மரக்கன்றுகளை நட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று பேரூராட்சி அலுவலர் செல்வகுமார் தலைமையில் சுகாதார மேற்பார்வையாளர் கார்த்தி, பணியாளர் கோபி மற்றும் டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் கொண்ட குழுவினர் மருதங்காவெளி, மன்னை சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் சாலையோரம் மற்றும் அரசுக்கு சொந்தமான இடங்கள், அரசு துறை வளாகம் ஆகிய பகுதியில் நூற்றுக்கணக்கான மரக்கன்றுகளை நட்டனர். மேலும் அந்த மரக்கன்றுகளை வளர தொடர்ச்சியாக தண்ணீர் ஊற்றி பராமரிக்கவும் ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் பல்வேறு பகுதியில் மரக்கன்றுகள் நட இருப்பதாக பேரூராட்சி செயல் அலுவலர் செந்திலன் தெரிவித்தார்.


Tags : barracks ,Muttupettai ,Mullapuram ,
× RELATED 2 கட்டுமான நிறுவன அதிபர்களுக்கு சொந்தமான 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை