×

குருகோயிலுக்கு வரும் பக்தர்கள் அவதி மகாத்மா காந்தி பிறந்தநாள் விழா

முத்துப்பேட்டை, அக்.4: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை வட்டார, நகர காங்கிரஸ் கட்சி சார்பில்மாகாத்மா காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு ஒன்றியக்குழு அலுவலகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாவட்ட செயலாளர் சதீஸ்குமார் தலைமையில் காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. முத்துப்பேட்டையில் உள்ள மூத்த குடிமக்கள் இயக்கம் சார்பில் ஊராட்சி ஒன்றிய குழு அலுவலகத்தில் உள்ள காந்தி சிலைக்கு அமைப்பின் கவுரவதலைவர் டாக்டர் மீராஉசேன் மாலை அணிவித்தார்.

பின்னர் காந்தி படத்தை ஊர்வலமாக திருத்துறைப்பூண்டி சாலை, பழைய பேருந்து நிலையம் வழியாக பேரூராட்சி அலுவலம் கொண்டு சென்றனர். அங்கு நடந்த நிகழ்ச்சியில் காந்தி படத்திற்கு பலரும் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். முத்துப்பேட்டை அரிமா சங்கம் சார்பில் தலைவர் கருணாநிதி மற்றும் நிர்வாகிகள் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். முத்துப்பேட்டை அடுத்த பின்னத்தூர் வளைவில் உள்ள காந்தி சிலைக்கு காங்கிரஸ் மூத்த உறுப்பினர் திருநாவுக்கரசு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முத்துப்பேட்டை புதுத்தெரு அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் நித்தையன் காந்தி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Tags : Devotees ,birth ,Mahatma Gandhi ,Avadi ,
× RELATED சித்திரை திருநாளை முன்னிட்டு...