பொன்னமராவதி, அக்.4: சிவங்கை மாவட்டம் தேவகோட்டையில் கிராம உதவியாளரை கொலை செய்த குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொன்னமராவதி தாலுகா அலுவலகம் முன்பு கிராம ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பொன்னமராவதி தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தாலுகா தலைவர் பழனியாண்டி தலைமை வகித்தார். செயலாளர் காடப்பிள்ளை முன்னிலை வகித்தார். கிராம உதவியாளர் நலச்சங்க மாநில துணைத்தலைவர் பிச்சை, மாவட்ட இணைச் செயலாளர்கள் மலைச்சாமி, பச்சையம்மாள், பொருளாளர் சின்னத்துரை, நலச்சங்க மாவட்டச் செயலாளர் நைனான் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை விளக்கி பேசினர்.இதேபோல கந்தர்வகோட்டையில் தாசில்தார் அலுவலகம் முன்பு வருவாய் ஊழியர் சங்க வட்ட தலைவர் பழனிமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்ட செயலாளர் சேகர், வட்ட துணை தலைவர் நெடுஞ்செழியன், பொறுப்பாளர் செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.