×

திருவாலங்காடு விவசாயிகளுக்கு ஈரோடு ஆராய்ச்சி நிலையத்தில் பயிற்சி

திருவள்ளூர், அக் 4: அட்மா திட்டத்தின் கீழ், திருவாலங்காடு விவசாயிகளுக்கு ஈரோடு உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் 2 நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.ஈரோடு மாவட்டத்தில் உள்ள ‘‘வல்வில் சுதேதி’’  உழவர்கள் உற்பத்தியாளர் நிறுவனத்தில், மாநில அளவிலான விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு, திருவாலங்காடு வட்டார அட்மா திட்ட ஒருங்கிணைப்பாளரான, வேளாண்மை உதவி இயக்குனர் வி.எபினேசன் தலைமையில், 50 விவசாயிகள் அழைத்து செல்லப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு, கூட்டுப் பண்ணையத்தின் முக்கியத்துவம் குறித்தும், விவசாயிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் ஏற்படும் நன்மைகள், புதிய வேளாண் தொழில்நுட்பங்கள், வேளாண் உற்பத்தி பொருட்களை மதிப்பு கூட்டுதல் குறித்து விவசாயிகளுக்கு நிறுவனத்தின் இயக்குனர் தியாகராஜன் விளக்கி பயிற்சி அளித்தார். இப்பயிற்சியானது தங்களுக்கு பயனுள்ளதாக இருந்தது என விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags : Erode ,
× RELATED ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உயிருக்கு போராடும் யானை..!!