×

மணமேல்குடியில் தென்னைக்கு நீர் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

மணமேல்குடி, அக்.4: மணமேல்குடி வட்டார வேளாண்மை விரிவாக்கம் சார்பில் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான தென்னையில் நீராபானம் எடுப்பது தொடர்பான ஒருநாள் பயிற்சி மணமேல்குடியில் நடைபெற்றது.பயிற்சியை வேளாண்மை உதவி இயக்குனர் ஆதிசாமி தலைமை வகித்து தொடங்கி வைத்தார். அறந்தாங்கி வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை வேளாண்மை அலுவலர் சுபத்ரா பயிற்சி அளித்தார்.

பயிற்சியில் தென்னையில் நீராபானம் எடுப்பது தொடர்பாகவும், அதனை குடிப்பதால் ஏற்படும் நன்மைகளையும் எடுத்துரைத்தார். மேலும் இப்பகுதி தென்னை விவசாயிகள் ஒன்றிணைந்து ஒரு குழுவாக சேர்ந்து பதிவு செய்து கொண்டு நீராபானம் எடுத்து விற்பனை செய்து அதிக லாபம் பெறுமாறு கேட்டுக்கொண்டார். பயிற்சியில் மணமேல்குடி பகுதி தென்னை விவசாயிகள் கலந்து கொண்டனர். பயிற்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மத்திய உணவு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

Tags :
× RELATED புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ்2 தேர்வில் 93.79 சதவீதம் தேர்ச்சி