×

ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க கோரி போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

அறந்தாங்கி, அக்.4: ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க வலியுறுத்தி, அறந்தாங்கியில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அறந்தாங்கி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு தொழிற்சங்களின் சார்பில் வாயில்கூட்டம் நடைபெற்றது.

தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தொமுச கிளைச்செயலாளர் யோகராஜ் தலைமை தாங்கினார். நெடுஞ்செழியன், சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொமுச பொதுச் செயலாளர் வேலுச்சாமி, ஏ.ஐ.டி.யு.சி பொதுச்செயலாளர் சக்திவேல் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி, பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை விளக்கி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு தலைவர் ராஜேந்திரன், செயலாளர் இளங்கோவன், பொருளாளர் சந்தானம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். செல்லத்துரை நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Transportation workers ,
× RELATED போக்குவரத்து தொழிலாளர் போராட்டம்