×

ஜப்பானில் வேலை வாங்கித் தருவதாக ₹5 லட்சம் மோசடி

பூந்தமல்லி, அக்.4: சென்னை மதுரவாயல், மேட்டுக்குப்பம், கடும்பாடி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமரேசன் (35).இவர் நேற்று மதுரவாயல் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் மதுரவாயலை சேர்ந்த நந்தகுமார் என்பவர் தன்னிடம் ஜப்பானில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 5 லட்சம் பெற்றுக்கொண்டு ஜப்பான் அழைத்துச் செல்லாமல் இந்தோனேஷியா அழைத்துச் சென்றார். இரண்டு மாத காலமாக அங்கு தங்க வைத்து வேலை எதுவும் தராமல் திருப்பி அனுப்பி விட்டார். மேலும் போலியாக விசா மற்றும் வேலைவாய்ப்பு கடிதத்தை தயாரித்து கொடுத்து விட்டு தற்போது பணத்தையும் திருப்பித் தராமல் ஏமாற்றி வருவதாக கூறினார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தைப் பெற்றுத் தருமாறு புகார் அளித்துள்ளார். இதுகுறித்து மதுரவாயல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Japan ,
× RELATED மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட...