×

காஞ்சிபுரம் நகரத்தில் புதிதாக கட்டப்படும் மேம்பால பணியை எம்பி ஆய்வு

காஞ்சிபுரம், அக்.4: காஞ்சிபுரம் நகரத்தில் புதிதாக கட்டப்படும், ரயில்வே மேம்பாலத்தை எம்பி செல்வம் ஆய்வு செய்தார்.காஞ்சிபுரம் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட காஞ்சிபுரம் நகரத்தில் திமுக எம்பி சிறுவேடல் செல்வம், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது, காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ரயில்வ மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்தார். உடன் நகர திமுக செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம், தலைமை செயற்குழு உறுப்பினர் சேகரன், ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார், நகர அவைத்தலைவர் சந்துரு, நிர்வாகிகள் எம்.எஸ்.சுகுமார், பார்த்தசாரதி, தமிழ்ச்செல்வன், ரமேஷ், வக்கீல் துரைமுருகன், வெங்கடேசன் உள்பட இருந்தனர்.


Tags : MB ,Kanchipuram ,
× RELATED 40 தொகுதிகளிலும் நிச்சயம் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்: முத்தரசன் உறுதி