தஞ்சை, அக். 4: தஞ்சையில் தந்தை பெரியார் 141வது பிறந்த நாள் விழா, பெரியார் பட ஊர்வலம், பொதுக்கூட்டம் நடந்தது. சிவகங்கை பூங்கா முன் நடந்த பொதுக்கூட்டத்துக்கு திக மண்டல செயலாளர் அய்யனார் தலைமை வகித்தார். மாநகர தலைவர் நரேந்திரன் வரவேற்றார். திக நிர்வாகிகள் குணசேகரன், அமர்சிங், அருணகிரி, வீரமணி, ஸ்டாலின், சேகர், சுதாகர், ராமலிங்கம், அரங்கராஜன் முன்னிலை வகித்தனர். திக பிரச்சார குழு அமைப்பாளர் அன்பழகன், திமுக தீர்மானக்குழு செயலாளர் சபாபதிமோகன் சிறப்புரையாற்றினர்.
திமுக தெற்கு மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன், மாநகர காங்கிரஸ் தலைவர் ராஜேந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சொக்கா.ரவி, மனிதநேய மக்கள் கட்சி மாநில செயலாளர் பாதுஷா, திராவிடர் இயக்க தமிழர் பேரவை மாவட்ட தலைவர் கலைவாணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தொடங்கிய பெரியார் பட ஊர்வலத்தை திக மாநில பொது செயலாளர் ஜெயக்குமார் துவக்கி வைத்தார். மண்டல தலைவர் ஜெயராமன் தலைமையில் திரளானோர் பங்கேற்றனர்.