×

ஓட்டலில் தீவிபத்து

சென்னை: ெசன்னை அண்ணா சாலையில் பிரபல பிரியாணி கடை செயல்பட்டு வருகிறது. நேற்று மாலை 3 மணி அளவில் இந்த கடையில் வாடிக்கையாளர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, சமையல் அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதனால் ஓட்டல் முழுவதும் கரும்புகை பரவியதால், வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் அலறியடித்து வெளியேறினர். தகவலறிந்து, திருவல்லிக்கேணி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து, தீயை அணைத்தனர். உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து திருவல்லிக்கேணி போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags : cafe ,
× RELATED பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே ஓட்டல்...