×

காஞ்சிபுரம் நகரில் திமுக எம்பி வாக்காளர்களுக்கு நன்றி

காஞ்சிபுரம், அக்.2: காஞ்சிபுரம் எம்பி செல்வம், காஞ்சிபுரம் நகர பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். நிகழ்ச்சிக்கு காஞ்சிபுரம் நகர செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம் தலைமை தாங்கினார். காஞ்சிபுரம் தொகுதி எம்எல்ஏ வக்கீல் எழிலரசன் வரவேற்றார். நகர அவைத்தலைவர் சந்துரு, துணை செயலாளர்கள் கருணாநிதி, கன்னியம்மாள் தேவராஜ், பொருளாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடந்த செப்.27ம் தேதி  வெள்ளிக்கிழமை, செவிலிமேடு, வெங்கடாவரம் மற்றும் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஓரிக்கை, தேனம்பாக்கம் பகுதிகளிலும் நன்றி தெரிவித்தார். தொடர்ந்து நேற்று காஞ்சிபுரம் நகரம் 39வது வட்டத்திலுள்ள பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்தில் தொடங்கி தொடர்ச்சியாக 1 முதல் 44 வட்டங்களில் நன்றி தெரிவித்து இறுதியாக 29வது வட்டத்தில் காந்தி சாலையில் அமைந்துள்ள  பெரியார் நினைவு தூண் பகுதியில் நன்றி தெரிவித்தார்.  இந்நிகழ்ச்சியில், தலைமை செயற்குழு உறுப்பினர் சேகரன், பொதுக்குழு உறுப்பினர் செங்குட்டுவன், நிர்வாகிகள் சிகாமணி, குமரேசன், சுகுமார், மாமல்லன், எஸ்கேபி சீனிவாசன், அபுசாலி,  ரவிக்குமார், வக்கீல் துரைமுருகன், யுவராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags : MPs ,DMK ,Kanchipuram ,
× RELATED மாமல்லபுரம் சுற்று வட்டார பகுதிகளில்...