×

குரோம்பேட்டை பகுதியில் 41 லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம், நிழற்குடை: திமுக எம்எல்ஏ திறந்து வைத்தார்

தாம்பரம்: குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில், ரயில்நிலையம் அருகே, தாம்பரம் மார்க்கத்தில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைத்து தர வேண்டும் எனவும், சானடோரியத்தில் திருநீர்மலை பேரூராட்சி 10வது வார்டுக்கு உட்பட்ட வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் கலையரங்கம் கட்டித்தர வேண்டும் எனவும் பொதுமக்கள்  பல்லாவரம் திமுக எம்எல்ஏ இ.கருணாநிதியிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்பேரில், அவரது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 34.99 லட்சம் செலவில் குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் நிழற்குடையும், சானடோரியத்தில் ₹6.25 லட்சம் செலவில் கலைஞர் கலையரங்கமும் கட்டப்பட்டது. இதற்கான பணிகள் முடிந்த நிலையில், பல்லாவரம் திமுக எம்எல்ஏ இ.கருணாநிதி நேற்று இவற்றை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் பொதுமக்கள், நலச்சங்க நிர்வாகிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : area ,Krompet ,Art Gallery ,DMK MLA ,Nizamkudai ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...