குன்னூர், அக்.2: கார்டைட் தொழிலக மேனிலைப்பள்ளி, நாட்டு நலப்பணித்திட்டம் சிறப்பு முகாம் நிறைவு விழா. கார்டைட் தொழிலக மேனிலைப்பள்ளியின் நாட்டுநலப்பணித்திட்ட சிறப்பு முகாமின் நிறைவு விழா ஜெகதளா கிராமத்தில் நடைப்பெற்றது. கார்டைட் தொழிலகத்தின் கூடுதல் பொது மேலாளர் குமார் வாழ்த்துரை வழங்கினார். மாவட்ட நாட்டு நலப்பணித்திட்ட தொடர்பு அலுவலர் சசிக்குமார், நீலகிரி மாவட்டத்தில் கார்டைட் தொழிலக நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களின் பங்கினை எடுத்துரைத்தார்.
கார்டைட் தொழிலகத்தின் செயல் மேலாளர், பள்ளி நிர்வாகி சங்கர், ஊர் பெரியவர் சாய்ராம் மணி, ஊர் தலைவர் பெள்ளி உட்பட பலர் பங்கேற்றனர். பழ மரக்கன்றுகளைக் கூடுதல் பொது மேலாளர் குமார், செயல் மேலாளர் சங்கர், தொடர்பு அலுவலர் சசிக்குமார் ஆகியோர் இணைந்து வழங்கினர். ஆசிரியர் கணேசன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ் அலுவலர் கார்த்திக் செய்திருந்தார்.