×

பூக்கடை ஊழியரிடம் ஜேப்படி

ஈரோடு, அக்.2: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வடக்குபேட்டை தண்டுமாரியம்மன் கோவில் முதல் தெருவை சேர்ந்தவர் சரவணகுமார் (37). இவர், சத்தியமங்கலம் பஸ் ஸ்டாண்டில் உள்ள பூக்கடையில் வேலை செய்து வருகிறார். நேற்று தனது தங்கையை பார்ப்பதற்காக கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள குட்டேபாளையத்திற்கு செல்வதற்காக புறப்பட்டார். சத்தியமங்கலம் பஸ் ஸ்டாண்டில் தனியார் பஸ்சில் ஏற முயன்றார்.

அப்போது, இவருக்கு பின்னால் நின்று கொண்டிருந்த 2 பேர் சரவணகுமாரின் பாக்கெட்டில் கையை விட்டு பணத்தை ஜேப்படி செய்தார். இதைப்பார்த்த சரவணகுமார் சத்தம் போட்டார். இதையடுத்து பஸ்சில் இருந்த சக பயணிகள் அந்த 2 பேரையும் பிடித்து சத்தியமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் புளியம்பட்டி பனையம்பள்ளியை சேர்ந்த கார்த்திக் (30), கோவை மாவட்டம் பொள்ளாச்சி மரப்பேட்டை தேர்முட்டி வீதியை சேர்ந்த மாணிக்கம் (45) என தெரிய வந்தது.

Tags : florist ,
× RELATED சென்னை பாதுகாப்பான நகரம் பெண்...