ஊட்டி, அக். 2: கோத்தகிரி அருகேயுள்ள நெடுகுளா பகுதியில் வருவாய்த்துறை தொடர்பான ஆய்விற்காக நேற்று மதியம் மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மலா, கோத்தகிரி தாசில்தார் மோகனா உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் சென்றுள்ளனர். தாசில்தார் வாகனத்தை அர்ஜூணன் என்பவர் ஒட்டியுள்ளார். நெடுகுளா அருகே ராஜ் நகர் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த போது கட்டுபாட்டை இழந்த தாசில்தார் ஜீப் சாலையோரம் உள்ள தேயிலை தோட்டத்திற்குள் புகுந்து பக்கவாட்டில் சாய்ந்தது. இவ்விபத்தில் தாசில்தார் மோகனா மற்றும் ஓட்டுநர் அர்ஜூணன் உள்ளிட்டோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. பின்னர் மற்ற அதிகாரிகள் அவர்களை உடனுக்குடன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.