×

சூலூரில் இன்று காங் பாதயாத்திரை

கோவை, அக். 2:  கோவை சூலூரில் இன்று காங்கிரஸ் பாதயாத்திரை மற்றும் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில், திரளாக பங்கேற்க மாவட்ட தலைவர் வி.எம்.சி.மனோகரன் அழைப்பு விடுத்துள்ளார். கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வி.எம்.சி.மனோகரன் வெளியிட்டுள்ள அறிக்ைக:
மகாத்மா காந்தி 150-வது  பிறந்தநாளையொட்டி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் வழிகாட்டுதலின்படி, கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் காந்திய கொள்கைகளை  வலியுறுத்தியும், அவரின் அகிம்சை குறித்த போதனையை மக்களிடம் எடுத்துச்செல்லும் வகையிலும் பாதயாத்திரை நடைபெறுகிறது. சூலூர் சட்டமன்ற  தொகுதியில் உள்ள சாமளாபுரத்தில் இன்று மாலை 4 மணியளவில் துவங்கும் இந்நிகழ்ச்சியை  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல்தலைவர் மோகன் குமாரமங்கலம் துவக்கிவைக்கிறார்.  

கருமத்தம்பட்டி பேரூராட்சியில் உள்ள சோமனூர் பவர்ஹவுஸ் சந்திப்பில் இந்த பாதயாத்திரை நிறைவுபெறுகிறது. இதைத்தொடர்ந்து மாலை 6 மணியளவில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.  இதில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுசாமி, செயல்தலைவர் மோகன்குமாரமங்கலம் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.  முன்னதாக, மகாத்மா காந்தி, லால் பகதூர் சாஸ்திரி, காமராஜர் படங்களுக்கு மாலை  அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியில், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மட்டுமின்றி, இளைஞர்கள்,  மாணவர்கள், பெண்கள் என பொதுமக்கள் பெரும் திரளாக பங்கேற்க வேண்டுகிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags : Sulur ,
× RELATED தாமரையை தோற்கடிக்கணும்… மனதில் இருப்பதை கொட்டிய டிடிவி